பாஜகவிற்கு ஓட்டுக்கேட்பேன், ஆனால், கட்சியில் சேரமாட்டேன்: நடிகர் கிச்சா சுதீப் பளீச் பேட்டி

கன்னட நடிகர் கிச்சா சுதீப்.
கன்னட நடிகர் கிச்சா சுதீப்.பாஜகவிற்கு ஓட்டுக்கேட்பேன், ஆனால், கட்சியில் சேரமாட்டேன்: நடிகர் கிச்சா சுதீப் பளீச் பேட்டி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்வேன். ஆனால், தேர்தலில் போட்டியிடவோ, கட்சியில் இணையவோ மாட்டேன் என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெற உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் கர்நாடகாவில் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே, பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இணைந்து கிச்சா சுதீப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரிக்கிறேன். அவர் என் மாமாவைப் போன்றவர். ஆரம்ப காலத்தில் அவர் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பொம்மை மற்றும் அவர் ஆதரவு கோரும் பாஜக வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்வேன்.

பிரதமர் மோடி எடுத்த சில முடிவுகளை நான் முற்றிலும் மதிக்கிறேன். ஆனால், இன்று நான் இங்கு அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், கட்சியில் இணையவோ, தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன்” என்று கூறினார்.

இதுதொடர்பாக பசரவாஜ் பொம்மை பேசுகையில், “அவர் எனக்கு ஆதரவளித்துள்ளார். எனக்கு ஆதரவளித்தார் என்பதற்கு அவர் பாஜகவை ஆதரிக்கிறார் என்று அர்த்தம். கிச்சா சுதீப் மிகவும் பிரபலமானவர். அது பாஜகவுக்கு பலமாக அமையும். தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in