சுஜாதா சும்மா... சுனில்குமார்தான் எல்லாம்!

சுஜாதா சும்மா... சுனில்குமார்தான் எல்லாம்!

கட்சியினர் நடந்துகொள்ளும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எவ்வளவுதான் மனவருத்தப்பட்டாலும் திமுகவில் உள்குத்து அரசியல் ஓய்ந்தபாடில்லை. வேலூர் மாநகர மேயராக, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த புஷ்பலதாவை கொண்டுவர வேண்டும் என அமைச்சர் துரைமுருகனும் அவரது பிள்ளை கதிர் ஆனந்தும் துடியாய் துடித்தார்கள். ஆனால் உள்ளே புகுந்து குட்டையைக் கிளப்பிய வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏ-வுமான நந்தகுமார், யாருக்கும் தெரியாமல் ஸ்டாலினிடம் கமுக்கமாகப் பேசி சுஜாதாவை மேயராக்கிவிட்டார்.

இதனால் மேயர் சுஜாதாவும் கதிர் ஆனந்த் ஆதரவாளரான துணை மேயர் சுனில் குமாரும் அடிக்கடி மாநகராட்சி கூட்டத்திலேயே மோதிக்கொண்டு நிற்கிறார்கள். இதில் சுனிலுக்கு ஆதரவாக புஷ்பலதாவும் புஷ்டி பலம் சேர்க்கிறாராம். இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டு, தங்கள் ஏரியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் கூட மேயரை அழைப்பதில்லையாம். சுனில் அண்ட் கோவுக்கு அமைச்சர் துரைமுருகனின் அனுக்கிரகமும் இருப்பதால் அதிகாரிகளும் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறார்களாம். அதனால், வேலூர் மாநகராட்சியில் மேயர் சுஜாதாவின் கையைவிட துணை மேயர் சுனில் குமாரின் கையே சவுண்டாக இருப்பதாக சமானியர்களும் சொல்கிறார்கள். பாவம் தான் சுஜாதா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in