அதிமுகவில் ஐக்கியமானார் அய்யாதுரை பாண்டியன்!

அதிமுகவில் இணைந்த போது...
அதிமுகவில் இணைந்த போது...

குஜராத் தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் இன்று அதிமுகவில் இணையலாம் என்று நேற்று நாம் சொல்லி இருந்தோம். அதுபோலவே, இன்று தனது பரிவாரங்கள் புடைசூழ சேலம் சென்று எடப்பாடியாருக்கு ஆளுயர மாலை எல்லாம் அணிவித்து அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார் அய்யாதுரை பாண்டியன். இதையடுத்து அதிமுகவில் இப்போதே பலருக்கு நடுக்கம் வந்துவிட்டதாம். குறிப்பாக, கடந்த தேர்தலில் அய்யாதுரையுடன் களம்கண்டு கடையநல்லூர் தொகுதியை வென்ற கிருஷ்ணமுரளிக்கு காய்ச்சலே வந்துவிட்டதாம். பசையுள்ள பார்ட்டியான அய்யாதுரை அதிமுகவுக்கு வந்துவிட்டதால் கடையநல்லூரை இனி அவருக்குத்தானே கொடுப்பார்கள் என அஞ்சுகிறாராம் முரளி.

ஆனால், ஓபிஎஸ்சின் முக்குலத்து முழக்கத்தை உடைக்க முக்குலத்து சமூகத்தவரான அய்யாதுரையை ராஜ்ய சபாவுக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறார் ஈபிஎஸ். அதில்லாவிட்டால் நெல்லை மக்களவைத் தொகுதியில் நிறுத்துவது என்ற திட்டத்தையும் வைத்திருக்கிறார். இதற்கான ’செட்டில்மென்ட்’ எல்லாம் பக்காவாய் பேசிமுடித்து தான் அய்யாதுரை அதிமுகவுக்கு வந்திருக்கிறார்” என்கிறார்கள். அதேசமயம் அய்யாதுரை பாண்டியனின் கடந்த கால அரசியலை பார்த்து வந்தவர்களோ, “கையில் பணப்புழக்கம் தாராளமாக இருப்பதால் எதிலும் தனித்துவமாக தெரியவேண்டும் என நினைப்பார் அய்யாதுரை. அவரது இந்த நடவடிக்கை அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காது. அதனால் அதிமுகவிலும் அவர் நீண்ட காலம் நீடிக்கமாட்டார்” என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in