
நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘’கிராமசபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி உள்ளாட்சிகள் தினத்தன்று 01.11.2023 காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள எதுவாக கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம். நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராமசபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
மேலும், 01.11.2023 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி Namma Grama Sabhai Mobile App மூலம் உள்ளீடு செய்ய வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.