ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் மற்றும் தற்கொலைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த மசோதாவைத் தமிழக அரசு கடந்த 19-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் மூலம் ஒருமனதாக நிறைவேற்றியது.

அதன்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதச்சிறை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஓராண்டு தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூதாட்டத்தை நடத்துபவருக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் எனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வருவதால், தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் கிடைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in