இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச தலைமறைவு?

இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச தலைமறைவு?

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலங்கை திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமறைவாகி விட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரே இதற்குக் காரணம் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது. அப்போது அதிபராக இருந்த கோத்தபய உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். அத்துடன் அதிபர் மாளிகைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்துடன் அங்கிருந்த பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக இலங்கை அதிபர் மாளிகையே புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன் காரணமாக ஜூலை 13-ம் தேதி கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் சுரங்கப்பாதை வழியாக இலங்கையை விட்டு தப்பியோடினார். இலங்கையில் இந்து மாலத்தீவுக்குச் சென்ற கோத்தபய, அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்றார். சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை இலங்கையில் பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை ஆளுங்கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். இந்த நிலையில் கோத்தபய ராஜபக்ச கொழும்புவில் உள்ள விஜிர்மாமாவதா பங்களாவில் தங்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர் தற்போது அங்கு தங்கவில்லை. அதனால் எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் எங்கு சென்றுள்ளார் என்ற தகவலை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மக்களின் எதிர்ப்பின் காரணமாக கோத்தபய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in