
"எனது சக உறுப்பினரான கெளதமி பாஜகவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது. அவர் நல்ல பண்பாளர்’’ நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான கௌதமி பாஜகவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அண்மையில் அன்பழகன் என்பவர் தன்னிடம் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் மோசடி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்பழகனுக்கு ஆதரவாக பாஜக மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் அவர் விலகல் குறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்; அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.