500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர்... காங்கிரஸின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!

ராகுல் காந்தி, கார்கே
ராகுல் காந்தி, கார்கே

மத்தியப் பிரதேசத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சாகர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசுகையில், ‘‘மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். மேலும், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும். வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கு மின்சார கட்டணம் கிடையாது. மாநிலத்தில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’’ என்று பேசினார்.

இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி
இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்திகோப்புப் படம்

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசத்தில் தற்போது ஆளுங்கட்சியாக பாஜக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் இம்முறை ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in