இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடா - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்!

இன்று பிற்பகல் 12.30 மணிக்கு 
 விஜயவாடா - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர்  மோடி துவங்கி வைக்கிறார்!

சென்னைக்கும் விஜயவாடாவுக்கும் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை இன்று செப்.24 ம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரயில் இருக்கைகள்
வந்தே பாரத் ரயில் இருக்கைகள்

ஆந்திர மாநிலம் விஜயவாடா-சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. விஜயவாடாவில் நடைபெறும் தொடக்க விழாவில் ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் விஜயவாடாவில் இருந்து குறைந்த நிறுத்தங்களுடன் சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னை வந்தடையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மீண்டும் விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை-விஜயவாடா இடையே குறைந்த நேரத்தில் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in