தமிழக பட்ஜெட்: ஒருநாள் கழித்து கருத்து சொன்ன கமல்

தமிழக பட்ஜெட்: ஒருநாள் கழித்து கருத்து சொன்ன கமல்

" தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் ஆறுதலும், ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து ஒருநாள் கழித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், " தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23 பட்ஜெட் ஆறுதலும், ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், " அரசுப் பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறப் பண உதவி, பெரியார் சிந்தனைகளை மொழிபெயர்க்க நிதி, மாநிலம் முழுதும் நூல்களுக்கான திட்டம் போன்றவை நம்பிக்கை தருகின்றன. அத்துடன் அழுத்தம், திருத்தமாக அளிக்கப்பட்ட வாக்குறுதி ஒன்றைப் பற்றிய பேச்சே இல்லை என்றும்" அவர் கூறியுள்ளார்.

" குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதாகச் சொன்ன மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டம், மாற்றுக்கட்சியின் வாக்குறுதியாக வந்தபோது வரவேற்றோம். ஆனால், அறிவித்த திட்டம் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது " என்று தெரிவித்துள்ளார். மேலும், "எரிவாயு விலையைக் குறைக்கும் அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்த்ததிலும் ஏமாற்றம் அதிகரித்துள்ளது" என்று கமலஹாசன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in