முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சிக்கலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான இவர் தற்போது விராலிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது.

அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2021 அக்டோபர் 17-ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை இலுப்பூரில் அமைந்துள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல் குவாரிகள், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கே 210 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

கடந்த முறை இந்த வழக்கு செப் 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இருப்பினும், அப்போது விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதாகவும் அதை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்க லஞ்ச ஒழிப்புத்துறை வழங்க உத்தரவிட்ட புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in