ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுப்பிடித்து வரும் நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், எடப்பாடி பழனிசாமியுடன் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்த தகவல் குறித்து எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘’ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். வரும் 1-ம் தேதி ஈரோட்டில் தனது தலைமையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. அதற்கு அந்த வேட்பாளர் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.