தமிழ்மகன் உசேன் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; சட்டத்துக்கு புறம்பான செயலுக்கு ஆதரவு இல்லை: ஓபிஎஸ் தரப்பு அதிரடி

ஓபிஎஸ்
ஓபிஎஸ்தமிழ்மகன் உசேன் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்

தமிழ்மகன் உசேன் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. சட்டத்துக்கு புறம்பான செயலுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என ஓபிஎஸ் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யாத தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் வேதனை, அதிர்ச்சியளிக்கிறது. அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்தில் செந்தில் முருகன் பெயர் இடம்பெறவில்லை. தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறியுள்ளார். தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்ற ரகசியத்தை காப்பாற்றும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முறை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும். நாங்கள் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்

இது குறித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், " உச்ச நீதிமன்ற உத்தரவின்படி யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொதுக்குழு முன்பு வைக்க வேண்டும். தமிழ்மகன் உசேன் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை, நாங்கள் எப்போதும் இரட்டை இலைக்குத்தான் ஆதரவு. சட்டத்துக்கு புறம்பான செயலுக்கு ஆதரவளிக்க மாட்டோம். யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in