`உடனிருந்தே கொல்லும் வியாதி ஓபிஎஸ்; தர்மம், நீதி வென்றுள்ளது'- மகிழ்ச்சிக்கு மத்தியில் ஈபிஎஸ் காட்டம்

`உடனிருந்தே கொல்லும் வியாதி ஓபிஎஸ்; தர்மம், நீதி வென்றுள்ளது'- மகிழ்ச்சிக்கு மத்தியில் ஈபிஎஸ் காட்டம்

இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என்று கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்வார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர். நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக தொண்டர்களையும், தீய சக்தி, விடியா தி.மு.க அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழு மனதோடு ஈடுபட்டு வருகிறோம். இந்த அரும் பணிகளுக்கு தடையாக உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் நீதி. நேர்மை, நாணயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம்.

இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது 23.6.2012 அன்று நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் 11.7.2022 அன்று கழக சட்டவிதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிவிப்புகளும் முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இன்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான கழகத்தின் அடிப்படை தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in