அதிமுகவின் 52வது தொடக்க விழா... உற்சாகமாக கொடியேற்றிய எடப்பாடி பழனிசாமி

அதிமுக கொடியை ஏற்றி வைத்த இபிஎஸ்
அதிமுக கொடியை ஏற்றி வைத்த இபிஎஸ்

அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 52வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் 52வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு கட்சியினர் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் போது உயிரிழந்த 8 குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்காக தலைமை அலுவலகத்தில் நுழைவு வாயில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தேர்தல் பணி குறித்தும் பேச உள்ளார். சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக கமிட்டி அமைத்தல் மற்றும் கட்சியின் கிளை அமைப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in