அதிமுக கூட்டணிக்கு அழைத்த எடப்பாடி பழனிசாமி- போட்டுடைத்த சீமான்

சீமான்
சீமான்

``அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். தனித்து போட்டி என்பது எங்கள் கொள்கை என்பதால் நாங்கள் மறுத்துவிட்டோம்'' என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளார்.

சீமான்
சீமான்

சேலத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், ‘’தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டணி வைத்திருப்பது நான் தான். 8 கோடி மக்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்துள்ளேன். ஒரு தலைவன் என்பவன் மக்களை முழுமையாக நம்ப வேண்டும்; நேசிக்க வேண்டும். என் மக்களை முழுமையாக நம்புகிறேன்-நேசிக்கிறேன். அதனால் நாங்கள் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுகிறோம்.

நாம் தமிழர் கட்சி வளர்ந்து 15%, 20% வாக்குகளைப் பெறும் போது விசிக, பாமகவை உள்ளடக்கிய கூட்டணி என்பது சாத்தியமாகலாம். இப்போதைக்கு பேசி பயனில்லை. திருமாவளவன், திமுகவைவிட்டு வரமாட்டார். அன்புமணி ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என சொல்லவும் முடியாது. வடக்க பறையன் படையாட்சி ஒன்னா இருந்து தெற்க பள்ளரும் கள்ளரும் ஒன்னா இருந்தா எங்களை வேறு யாரும் ஆண்டிருக்கவே முடியாது. அது ஒரு கெடுவாய்ப்பு. இனிவரும் காலங்களிலாவது மாறுதல் உருவாகணும்.. உருவாக்கணும்.

அதிமுக கூட்டணி குறித்து என்னை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசினார். அப்போது, கூட்டணிக்கு நான் வர முடியாது. என் கொள்கை முடிவு இதுதான் என எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டேன். அது அய்யாவுக்கும் புரிந்திருக்கும். 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். 20 ஆண்கள்; 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in