இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் ஆணையம் பதில்

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார்: உச்சநீதிமன்றத்தில் ஆணையம் பதில்

``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார்'' என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களது தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம். ஆனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அதனால் இதுதொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக பிரதிநிதி என்ற முறையில் பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார் என்றும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தங்களை யாரும் அணுகவில்லை என்றும் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை என்றும் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும் வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in