`இந்தியாவை 'ஹிந்தி'யா என பிளவுபடுத்த வேண்டாம்'- அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

`இந்தியாவை 'ஹிந்தி'யா என பிளவுபடுத்த வேண்டாம்'- அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்த வேண்டாம் என்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திக்கு இணையாக ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் உள்பட 22 இந்திய மொழிகளை அலுவலர் மொழியாக்கி இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் தான் என கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர், இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதற்கான முயற்சிகளிலேயே மத்திய அரசு முனைப்பாக உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை என்றும் இந்தி மொழி உருவாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி உருவாகிவிட்டது என்றும் இந்தி மொழி உருவாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி உருவாகிவிட்டது என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், கலாச்சாரம், வரலாற்று அறிய இந்தி கற்க வேண்டும் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டிற்கு எதிரானது என்றும் ஒருமைப்பாடு மிக்க இந்தியாவை ஹிந்தியா என்ற பெயரில் பிளவு படுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in