`நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் என்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்’ - ஜெயக்குமார் ஆவேசம்

`நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் என்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம்’ - ஜெயக்குமார் ஆவேசம்

``நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து காவல் துறையிடம் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார்.

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். ஏற்கெனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை உள்ளதால் நிபந்தனையில் சற்று தளர்வு வழங்குமாறும் ஜெயக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் தளர்வு வழங்கியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டும். தன்னிடம் கேட்கக்கூடாது எனவும் தான் டிரெண்டிங்கில் இருப்பதால் என்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் எனவும் ஆவேசமாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியின் போது தமிழகம் அனைத்துத் துறையிலும் வளர்ச்சி பெற்று முதல் மாநிலமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 17-வது இடத்தில் உள்ளது. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. திமுக ஆட்சி கற்கால ஆட்சி. அதிமுக அரசு ஹீரோவாக செயல்பட்டது. திமுக அரசு ஜீரோவாக உள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதே திராவிட மாடலின் நோக்கம். அதிமுக சசிகலாவுடன் இணைவது என்பது எடுபடாத விசயம். இணைய வாய்ப்பே இல்லை. இணைப்பு குறித்து சசிகலா பேசி வருவதை கேட்டு, கேட்டு புளித்துவிட்டது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in