திமுக வெற்றிக்கு மட்டன், கோழிக்கறிதான் காரணம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவை

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு திமுக வெற்றிக்கு மட்டன், கோழிக்கறித்தான் காரணம்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவை

"ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு திமுகவினர் மட்டன் கறி, கோழிக்கறி வாங்கி கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவை பார்த்து முதலமைச்சர் பயந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 28 நாட்கள் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பொது மக்களை கூடாரங்கள் அமைத்து காலையிலும், மாலையிலும் அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளும் காலையில் ஆயிரம் ரூபாய் மாலை ஆயிரம் ரூபாய் என வழங்கினர். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன் கறி, கோழிக்கறி வாங்கி கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். பணத்தை வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியில் கூறியுள்ளார். அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா தாண்டி ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா என்று மாறும் அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கொண்டாடும் அளவுக்கு இங்கு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் ஆணையம் திமுகவிற்காகவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் துணை நின்றது. இது என்னுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இது தோல்வி அல்ல, வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in