மத்திய பட்ஜெட்டை விவாதிக்க ஜன.29-ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயம்.
சென்னை அண்ணா அறிவாலயம்.மத்திய பட்ஜெட்டை விவாதிக்க ஜன.29-ல் திமுக எம்.பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

“ஒன்றிய அரசின் 2023-24 -ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்க, ஜனவரி 29-ம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.1.2023 அன்று காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

இதில், கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து பொருளில் விவாதிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in