ஆளுநர் ரவிக்கு எதிராக மீண்டும் களமிறங்கியது திமுக

ஆளுநர் ரவிக்கு எதிராக மீண்டும் களமிறங்கியது திமுக

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது.

தமிழக மாணவர்களை காவு வாங்கி வரும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு. ஆனால், இந்த மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்காமல் 142 நாட்களுக்கு பிறகு தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பினார். ஆளுநரின் இந்த செயல் தமிழக அரசு மட்டுமின்றி மாணவர்களையும் வேதனையடைவை வைத்தது.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவையும் ஆளுநர் தற்போது வரை கிடப்பில் வைத்துள்ளார். முதல்வரும் ஆளுநரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார். இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in