`மக்களை ஏமாற்றுகிறது திமுக'- சொல்கிறார் தங்கமணி

`மக்களை ஏமாற்றுகிறது திமுக'- சொல்கிறார் தங்கமணி

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றி வருகிறது" என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மாடகாசம்பட்டியில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ செய்தியளர்களிடம் பேசுகையில், "உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியைவிட்டு செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள், கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்ததும் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக அறவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.

மாநிலம் முழுவதும், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, சாராயம், லாட்டரிசீட்டு விற்பனை அதிகளவில் நடக்கிறது. பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்கின்றனர். மக்களுக்கான தேவைகளை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in