தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தலாம்: டிஜிபி சைலேந்திரபாபு அனுமதி

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தலாம்: டிஜிபி சைலேந்திரபாபு அனுமதி

தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த டிஜிபி சைலேந்திரபாபு அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்திருந்த நிலையில், அதற்கு தமிழக காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாகப் பேரணி நடத்த அனுமதி கேட்டுக் கொடுக்கப்பட்ட மனுவை காவல்துறை மீண்டும் நிராகரித்தது.

இதையடுத்து மீண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாகப் பேரணிக்கு அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும்  அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அனுமதி மறுத்தால் காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.

இதன்படி நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பேரணி நடத்த டிஜிபி சைலேந்திரபாபு அனுமதி அளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in