'விரைவில் உங்களை கொல்வோம்' - யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல்

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்'விரைவில் உங்களை கொல்வோம்' - யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 112 என்ற அவசர உதவி எண் மூலம் இந்த மிரட்டல் விடப்பட்டது.

யோகி ஆதித்யநாத்துக்கு தொலைபேசி அழைப்பு மூலம் வந்த மிரட்டலைத் தவிர, உ.பி காவல்துறையின் சமூக ஊடக கணக்குக்கும் மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுத்தவரின் சமூக ஊடக பக்கத்தின் டிபியில் அல்லா என்ற வாசகம் அடங்கிய புகைப்படம் இருந்தது. அந்த மிரட்டலில்,"சி.எம். யோகியை விரைவில் கொன்றுவிடுவோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

112 என்ற எண் அவசரநிலை ஏற்பட்டால் காவல்துறையை அழைக்க உத்தரபிரதேச அரசு வழங்கிய இலவச தொலைபேசி எண் ஆகும்.

நேற்று, யோகி ஆதித்யநாத், அம்ரோஹாவில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, "தோலக் வாசித்ததன் மூலம் உங்கள் தொன்மையான கலையை உயர்த்தியது போல், 'தோலக்' வாசித்ததன் மூலம் மாஃபியாவை ஒழிக்கும் எங்கள் பணியிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

அபிவிருத்திப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கை இரட்டை எஞ்சின் மூலம் முன்னெடுத்துச் செல்வதால் இது சாத்தியமாகியுள்ளது" என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in