`தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம்'- சி.வி.சண்முகத்துக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல்

`தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம்'- சி.வி.சண்முகத்துக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல்

"தலையை வெட்டி தோரணமாக தொங்கவிட்டு விடுவோம்" என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் சி.வி.சண்முகத்தின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், ராஜ்ய சபா எம்.பியுமான சி.வி.சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் இன்று டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த சில தினங்களாக ராஜ்ய சபா எம்.பி சி.வி.சண்முகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.பி சி.வி.சண்முகத்தின் தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம் என ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல 2021-ம் ஆண்டு சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்த போது, வழக்கு பதிவு செய்தனர். அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சி.வி.சண்முகத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக அந்த போலீஸ் பாதுகாப்பை திரும்ப வழங்க வேண்டும். கொலை மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண் ஆதாரத்துடன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம். யார் தூண்டுதலின் பேரில் எதற்காக கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்பதை போலீஸார் கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in