மதுரை செல்லும் ஆளுநருக்கு கருப்பு கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார்.

தியாகி சங்கரய்யா
தியாகி சங்கரய்யா

இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துவிட்டார். இதற்கு ஆளும் திமுக அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், நாளை பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல உள்ள ஆளுநருக்கு எதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)
கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தியாகி சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மதுரை மாநகர போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன்

இதனிடையே, இன்று பிற்பகல் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற மதுரை எம்.பி சு.வெங்கடேசன், நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அரங்கேற்க உள்ள பெரியார் பற்றிய நாடகத்தின் ஒத்திகையை கண்டு ரசித்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், ஆளுநர் வருகையொட்டி, பெரியார் நாடகம் நடத்தப்படுவது என்னவொரு பொருத்தம் என குறிப்பிட்டுள்ள அவர், காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக இன்று காலை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நட பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

மேலும், தமிழக ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி குறித்து பேசுபவர்களை கண்டாலே ஆளுநருக்கு பிடிப்பதில்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார் என கடுமையான விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார்.

102 வயதாகும் தியாகி சங்கரைய்ய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு 9 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர், இந்த தள்ளாத வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதோடு, பொதுவுடைமை கொள்ளையிலும் ஈடுபாடு கொண்டவர். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதில் கையெழுத்திட தமிழக ஆளுநர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in