கே.எஸ்.அழகிரியின் நிகழ்ச்சிகள் திடீர் ரத்து: என்ன காரணம் தெரியுமா?

கே எஸ் அழகிரி
கே எஸ் அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருப்பவர் பச்சைமுத்து. இவரது மகனின் திருமணம் கோயம்புத்தூரில் இன்று நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்பதாக இருந்தது. தொடர்ந்து கருத்தம்பட்டி வினோபா நகரில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியிலும், திருப்பூர் மாவட்ட நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக கே.எஸ்.அழகிரியை வரவேற்று பிளக்ஸ், பேனர்கள், வண்ண நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கே.எஸ்.அழகிரி பங்கேற்க இருந்த திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையின் கண்டனத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவரது பயணம் திடீர் ரத்தானது சர்ச்சையானது.

இந்நிலையில், கே.எஸ்.அழகிரியின் மனைவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடன் இருந்து பார்க்க வேண்டி இருந்தது. அதனால்தான் கே.எஸ்.அழகிரியின் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in