
``அடுத்த வருடம் நடக்கவுள்ள மக்களவை தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது" என்று இந்தியா கூட்டணி குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.
மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இம்மாதம் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல்களும் நடக்க உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன. இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய பங்காற்றி வருகிறது. அடுத்தடுத்து 3 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் எப்போது என்று இன்றுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். "இந்தியாவில் பல கட்சிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள மக்களவை தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்" என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!