`இலங்கையின் செயல் அச்சுறுத்தும் வகையில் உள்ளது'- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 12 பேரையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 1-ம் தேதி, காசாக்குடிமேட்டைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீழகாசாகுடிமேடு பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும், அருகில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுமாக மொத்தம் 12 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

நேற்று பிற்பகலில் வேதாரண்யம் அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் 12 பேரும் படகுடன் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை ஜூலை 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீன்பிடித்தடை காலம் முடிந்துள்ள நிலையில் மீன் பிடிக்க சென்ற இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in