தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்ட நிலையில் வீடு திரும்பினார். அன்று உடல் சோர்வுடன் காணப்பட்ட முதல்வருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர்.

இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது. மருத்துவப் பரிசோதனை முடிந்து முதல்வர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in