சீமான் தாக்கல் செய்த வழக்கு... விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவு!

நடிகை விஜயலட்சுமி - சீமான்
நடிகை விஜயலட்சுமி - சீமான்

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி மார்ச் 19ல் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சீமான்
சீமான்

அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை.

கோப்புப்படம் விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற தருணம்
கோப்புப்படம் விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற தருணம்

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 19ஆம் தேதி பிற்பகல் 2:15மணிக்கு புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பேச்சுவார்த்தையில் சுபம்... அதிமுக - தேமுதிக நாளை ஒப்பந்தம் கையெழுத்து!

அதிர வைக்கும் வீடியோ... தண்டவாளத்தில் நின்ற ரயில் பற்றி எரிந்ததால் பரபரப்பு!

2 தொகுதிகள் நிச்சயம்... இரட்டை இலை தரப்பில் மதிமுகவுக்கு தூது!

மக்களவைத் தேர்தல்... தவெக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு!

'கருக்கலைப்பு பெண்களின் உரிமை...' முதல் நாடாக சட்ட மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in