அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பதவி தப்புமா?: வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு!

அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் பதவி தப்புமா?: வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன், 60 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சுமார் 7,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in