‘சிறுபான்மையின மக்களின் வாக்குகளுடன் 2024 தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும்’ - வேலூர் இப்ராஹீம் உறுதி

‘சிறுபான்மையின மக்களின் வாக்குகளுடன் 2024 தேர்தலில் பாஜக மீண்டும் வெல்லும்’ - 
வேலூர் இப்ராஹீம் உறுதி

சிறுபான்மையின மக்கள் வாக்குகளுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வென்று பிரதமராக மோடி தொடர்வார் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் கூறினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேலூர் இப்ராஹீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது... “திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் தனபாலனுக்கு கொலை மிரட்டல் விடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எஸ்பி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியது போல் திமுக அடித்தால், பாஜகவும் திரும்ப அடிக்கும். குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யபபட்டு விட்டனர். இதன் பிறகும், குஜராத் கலவர சித்தரிப்பு வீடியோ வெளியிட்ட நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு கல்வி, பொருளாதாரம் உள்பட 14 நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையின் மக்களின் வாக்குகளுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மீண்டும் வென்று பிரதமராக மோடி தொடர்வார். இந்த அச்சத்தால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரவாதம் மீண்டும் உள்ளதாக சித்தரிப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் சில தடை செய்யப்பட்ட அமைப்புகள் இந்துக்களுக்கு எதிராக மதக்கலவரம் செய்யும் நோக்கில் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை பாஜக ஆதரிக்கிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in