
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினார்.
அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!