திமுகவிற்கு சாமி, கோவில், பூஜை என்றால் அலர்ஜி! வானதி சீனிவாசன் பேட்டி!

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு

குடியரசு தலைவரை எந்த இடத்தில் அழைக்க வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் இருப்பதாகவும், குடியரசு தலைவர் பதவி வழங்கியுள்ளதற்காக வரவேற்க பாருங்கள் என கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில், நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை முன்னிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , கூட்டத்தொடரின் முதல் நாளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெறுவதற்கு நீண்ட நாட்களாக பல முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயம் பெண்களை உள்ளடக்கியதாக முழுமையானதாக மாற ஒவ்வொரு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு அவசியம் எனக்கூறிய அவர் பெண்களின் நலனை முன்னிறுத்தி தான் பெரும்பாலான திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு இருக்கிறது எனவும் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பல்வேறு பலன்களை அடைய நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி எனவும் தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு

சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் ஆய்வு கூட உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பான்மை மாநிலங்கள் 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக பங்களிப்பு மாறி கொண்டு இருக்கின்றது என்பதை சொல்லி இருக்கின்றது எனவும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்து ஒரு மனதாக இந்த மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த மசோதாவை பற்றி அரசியல் ரீதியாக விமர்சிப்பதை விட்டுவிட்டு முழுமையாக பரிபூரண மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் வாக்கு வங்கி அரசியலைப் பற்றி பேசும் கனிமொழி, 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அவர் சார்ந்துள்ள கட்சியில் தீர்மானம் போட்டு இருக்கும் நிலையில் எந்த வாக்குக்காக திமுக தீர்மானம் போட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.

குடியரசு தலைவராக உயர்ந்த ஸ்தானத்தில் பழங்குடி இனத்தவரை சேர்ந்தவர் அமர வைக்கப்பட்டிருக்கும் நிலையில், சனாதனம் என்றால் அதை வரவேற்க பாருங்கள் என்ற அவர், குடியரசு தலைவரை எந்த இடத்தில் அழைக்க வேண்டும் என்பதற்கு விதிமுறை இருக்கிறது எனவும் விதிமுறை மற்றும் மரபுகளில் இருந்து பாஜக விலகி இருக்காது எனவும் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக மாற்ற பாஜகவினர் முயன்று வருகின்றனர் எனவும் திமுகவிற்கு சாமி, கோவில், பூஜை என்றால் ஒரு அலர்ஜி இருக்கிறது எனவும் அதனால் அரசியல் அதிகாரத்தை வைத்து இதை தடுக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்துமத நம்பிக்கைகளை சீரழிக்கும் பணிகளை திமுக செய்து கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டிய அவர் 15 லட்ச ரூபாய்க்கு ஏகப்பட்ட விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது எனவும் ஹிந்தியில் பேசியதை விளங்கிக் கொள்ளாமல் விமர்சிக்கின்றனர் எனவும் விமர்சித்தார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்று நாள் எனவும் கூட்டணியை பொறுத்தவரை தேசிய தலைமை தான் முடிவு செய்யும், அதனால் இந்த விஷயத்தில் கூட்டணி தொடர்வது, கூட்டணியில் யார் இருப்பது, யார் தலைமை என்பது எல்லாமே கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்றார்.

கூட்டணியை பொறுத்த வரை, நான் சொன்ன இந்த பதிலை தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. கூட்டணி தொடர்பாக எந்த ஒரு பதிலையும், வார்த்தையையும் நான் சொல்ல தயாராக இல்லை என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in