எங்கள் நேரம் வரும்வரை காத்திருக்கிறோம்: எதற்காக இப்படி ட்விட் செய்தார் அண்ணாமலை

எங்கள் நேரம் வரும்வரை காத்திருக்கிறோம்: எதற்காக இப்படி ட்விட் செய்தார் அண்ணாமலை

இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவது பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என்று திருச்சி சிவா மகன் சூர்யா கைது விவகாரம் தொடர்பாக பாஜக மாநில அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உளுந்தூர் பேட்டையில் தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டியதாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பியின் மகனும், பாஜக ஓபிசி பிரிவு மாநிலப்பொதுச் செயலாளருமான சூர்யா நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்கு புதிதல்ல. அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா சிவா கைது செய்யப்பட்டதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in