திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீஸில் புகார்

திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது போலீஸில்  புகார்

பாஜக பெண் நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, கௌதமி, காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கே.கே.நகர் பகுதியில் திமுக சார்பில் கடந்த 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், திமுக பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சைதை சாதிக் பேசும் போது பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகை குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோ வைரலானது. இந்த பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். அத்துடன், வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். இதன் பின் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் கூறுகையில், " சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகளைத் தரக்குறைவான வார்த்தையால் இழிவுபடுத்தும் வகையில் பேசியது கண்டிக்கதக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். குறிப்பாக திமுக நிர்வாகிகள் பெண்களைத் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு தேர்தலின் போது மக்கள் அதற்கு தக்கபதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in