மாநகராட்சி கூட்டத்திற்கு கழுத்தில் மப்ளர் கட்டி வந்த பாஜக கவுன்சிலர்கள்: என்ன காரணம்?

மாநகராட்சி கூட்டத்திற்கு கழுத்தில் மப்ளர் கட்டி வந்த பாஜக கவுன்சிலர்கள்: என்ன காரணம்?

நாகர்கோவில் மாநகராட்சியின் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த பாஜக கவுன்சிலர்கள் கழுத்தில் மப்ளர் கட்டி தங்கள் கழுத்தை பாதுகாப்புடன் கொண்டுவருவதாகத் தெரிவித்தனர். இந்த சுவாரஸ்ய சம்பவத்தின் பின்னணி இதுதான்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், “நான் மேயராக இருக்கும் பகுதியில் பாஜகவினர் இடையூறு செய்தால்...” எனச் சொல்லிவிட்டு கழுத்தை அறுப்பேன் என்பது போல் செய்கை செய்தார். இது சமூகவலைதளங்களில் அப்போது வைரலானது. இதற்கு மறுநாளே அதே இடத்தில் கூட்டம் போட்டு பதில் கொடுத்தது பாஜக.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனும் நாகர்கோவில் எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தியும் முதல்வரை நேரில் சந்தித்து, குமரி மாவட்டத்தில் ஆட்சியாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக புகார் மனு கொடுத்தனர். இதற்கு எவ்வித ரியாக்‌ஷனும் வராத நிலையில், ’நாகர்கோவில் மேயரை கைது செய்’ என்று பாஜகவினர் நாகர்கோவில் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்பு இன்று மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்திருந்த பாஜக கவுன்சிலர்கள் மேயர் மகேஷ், பாஜகவினர் கழுத்தை சீவி விடுவேன் என சொன்னதற்கு எதிர்ப்பைக் காட்டும்வகையில் கழுத்தில் மப்ளர் அணிந்து வந்தனர். மேலும் தேசியக்கொடி வாங்கி விற்பனை செய்ததிலும், நாகர்கோவில் அனாதை மடத்தில் மண் மாற்றியதிலும் மாநகராட்சி முறைகேடு செய்திருப்பதாகவும் கூறி பாஜக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in