ஆளுநரை மிரட்டினார்கள்: எம்எல்ஏக்கள் வேல்முருகன், செல்வப்பெருந்தகை மீது போலீஸில் பாஜக புகார்

ஆளுநரை மிரட்டினார்கள்: எம்எல்ஏக்கள் வேல்முருகன், செல்வப்பெருந்தகை மீது போலீஸில் பாஜக புகார்

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்ஆணையரிடம் ஆன்லைன் மூலமாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக செயலர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, சட்டமன்ற உறுப்பினர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, ஆளுநரை ஜனநாயக கடமையாற்ற விடாமல் மிரட்டும் தொணியில் செயல்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரை பயமுறுத்தி, பணி செய்யவிடாமல் தடுக்கிற எண்ணத்தில் சைகை காட்டியது தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிட்டுள்ள அவர், கூச்சலிட்டு மிரட்டும் தொணியில் செயல்பட்ட, வேல்முருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in