அதிமுக கட்சி பெயர் பயன்படுத்த தடை... ஓபிஎஸ் மேல்முறையீடு... அவசர வழக்காக விசாரிக்கிறது உயர் நீதிமன்றம்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
Updated on
1 min read

அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுறுற்ற நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ‘’அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.

எனவே, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இன்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் அவசர வழக்காக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in