திருவண்ணாமலை 4.5 % வாக்குப்பதிவு... காலை 8 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் இதுதான்!

திருவண்ணாமலை 4.5 % வாக்குப்பதிவு... காலை 8 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் இதுதான்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 8 மணி வரையிலான வாக்குப்பதிவு  நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாட்டில் பதினெட்டாவது மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் பிரபலங்கள் பலரும் காலையிலேயே வந்திருந்து தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர் இதனால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறால் வாக்குப்பதிவு துவங்குவது சற்று காலதாமதம் ஆனது. மற்றபடி பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் குறிப்பிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை ஏழுமணிக்கே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதனால் மற்றவர்களும் வாக்குச்சாவடியை நோக்கிச் சென்று வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் காலை 8 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் 4.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.  ஆரணி மக்களவைத் தொகுதியில் காலை 8 மணி நிலவரப்படி நான்கு சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதே போல சென்னையின் மூன்று தொகுதிகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற தொகுதிகளிலும் காலை 8 மணி நிலவரப்படி சுமார் நான்கு சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in