`திண்டுக்கல் லியோனியை கைது செய்யுங்கள்'- சென்னை காவல் ஆணையரிடம் இந்து முன்னணி புகார்

`திண்டுக்கல் லியோனியை கைது செய்யுங்கள்'- சென்னை காவல் ஆணையரிடம் இந்து முன்னணி புகார்

இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் திண்டுக்கல் ஐ லியோனியை கைது செய்ய வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி பின்னர் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி. தற்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக உள்ள திண்டுக்கல் ஐ லியோனி பல்வேறு மேடைகளில் தொடர்ந்து இந்து மதத்தைக் குறித்தும், இந்து மத வழிபாடுகளை குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என பாரத் இந்து முன்னணி இயக்கம் சார்பில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பாரத் இந்து முன்னணி இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு
பாரத் இந்து முன்னணி இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு, "வேற்று மதத்தைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி தனது மதத்தில் நடைபெறும் மோசடிகளை சுட்டிக்காட்டாமல் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது கண்டனத்துக்குரியது. இந்து மத மந்திரங்களையும், இந்து மத வழிபாடுகளையும் சர்ச்சைக்குரிய வகையில் லியோனி விமர்சித்து வருவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது.

திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக அரசு நியமித்தது தவறானது. அவர் மூலம் இளம் தலைமுறையினர் மனதில் மத வேற்றுமை எனும் நஞ்சு விதைக்கப்படும் சூழல் உருவாகும். தொடர்ந்து இந்து மதத்தை குறித்து தவறான கருத்துக்களை பேசி வரும் திண்டுக்கல் ஐ லியோனியை கைது செய்ய வேண்டும். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காத பட்சத்தின் இந்து அமைப்புகள் ஒன்றுகூடி நீதிமன்றத்தை நாடி லியோனியை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in