கட்டாயம் ஓட்டு போடுங்க... இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!

ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

இம்முறை புதிதாக வாக்களிக்கும் உரிமை பெற்றிருக்கும் இளைஞர்கள் அனைவரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான்

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று  வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இளைஞர்கள் உள்ளிட்ட  அனைவரும் தவறாது வாக்களிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், 'வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிகமான இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவே, வாக்களிக்க தகுதி உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.

அனைத்து மக்களும் குறிப்பாக, இளைஞர்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர் ரகுமானின் ’வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு பதிவை பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதனால் அவரின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in