அதிகாலையிலேயே பரபரப்பு... அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உட்பட 18 இடங்களில் அதிரடி சோதனை!

அதிகாலையிலேயே பரபரப்பு... அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு  உட்பட 18 இடங்களில் அதிரடி சோதனை!

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. நகர் சத்யா வீடு உட்பட மொத்தம் 18 இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ராயபுரத்தைச் சேர்ந்த அரவிந்த்தக்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில் 2016 முதல் 2021 ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சத்யா தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 2.78 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் அவரது சொத்து மதிப்பு 13 கோடி.

மேலும் அவர் மனைவி‌ ஜெயசித்ரா, மகள் கவிதா பெயரில் உள்ள சொத்துக்களை மறைத்து மனுதாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் இவ்வழக்கில் முகாந்திரம் இருந்தால்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

தி நகர் சத்யா
தி நகர் சத்யா

அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தி.நகர் சத்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்யா சட்டமன்றத் தேர்தலில் சொத்துக்களை மறைத்து போட்டியிட்டது தெரியவந்தது.

அது மட்டுமின்றி 2016 முதல் 2021 ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சென்னை ஆந்திரா, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது மனைவி ஜெயசித்ரா, மகள் கவிதா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை 6.30 மணிமுதல் வடபழனியில் உள்ள சத்யா வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 16 இடங்களிலும் திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூரில் தலா ஒரு இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் வெளியாகும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in