அமைச்சருக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை

``ஆவின் விவகாரத்தில் நான் லஞ்சம் வாங்கியதை 48 மணி நேரத்துக்குள் நிரூபிக்காவிட்டால் அமைச்சர் பதவி விலக வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

ஆவின் குறித்து அண்ணாமலையின் குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை என்றும், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

அமைச்சர் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘’இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.

ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.

உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு’’ என விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in