அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்!

அண்ணாமலை
அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்!

தஞ்சாவூரில் கள்ள மது வாங்கிக்  குடித்த இருவர் உயிரிழந்திருப்பதை அடுத்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக்கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மது வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் மரணமடைந்துள்ளார். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மரணித்துவிட்டார்.

கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் மரணங்கள் தொடர்கின்றன. இந்த போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் இந்தத் துறையின் அமைச்சரான  செந்தில் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுக் கடையின் முன்பாக தஞ்சை தெற்கு மாவட்ட  பாஜக தலைவர் ஜெய் சதீஷ் தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா என்பதை முதல்வர்  ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.  அதுமட்டுமல்லாது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in