`குரூப் டி தேர்வுக்கு வெளிமாநிலத்தில் மையமா?; கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்'- கொந்தளிக்கும் அன்புமணி!

`குரூப் டி தேர்வுக்கு வெளிமாநிலத்தில் மையமா?; கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்'- கொந்தளிக்கும் அன்புமணி!

குரூப் டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 3,769 காலிப் பணியிடங்களை நிரப்ப, குரூப் டி தேர்வு மூலம் மூன்று கட்டமாகத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே, வடகிழக்கு எல்லை ரயில்வே கிழக்கு கடற்கரை ரயில்வே ஆகியவற்றிற்கு மூன்றாவது கட்ட தேர்வு வரும் 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8-ம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காகத் தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்குச் செல்ல 700 கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டும். 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்துத் தங்க வேண்டும். இது சாத்தியமல்ல. 700 கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். தேர்வுக்குத் தயாராவதில் தடையை ஏற்படுத்தும். மாணவர்களின் தேர்வு எழுதும் திறனைக் கெடுக்கும் என்பதால் இது கூடாது. மாணவர்கள் இயல்பாகத் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in