`புள்ளி விவரங்கள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன’- அன்புமணி

`புள்ளி விவரங்கள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன’- அன்புமணி

“குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடக் கூடாது. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் ஒரு மாநில அரசின் முதன்மைப் பணியாகும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய அளவில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடக் கூடாது. ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4,465 போக்சோ வழக்குகள். 69 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 99.25% பெண் குழந்தைகள்.

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கடந்த காலங்களில் பா.ம.க. எழுப்பிய புகார்களை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் ஒரு மாநில அரசின் முதன்மைப் பணியாகும். அந்தக் கடமையைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in