`உங்களுக்கு தெரிந்திருந்தே வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாது'- அமைச்சர் நாசரை சாடும் அன்புமணி

`உங்களுக்கு தெரிந்திருந்தே வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாது'- அமைச்சர் நாசரை சாடும் அன்புமணி

பச்சை உறைப் பால் வினியோகத்தைக் குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்குக் குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்குக் கடுமையாகத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாகக் கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பச்சை உறை பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறைப் பால் விலை உயர்த்தப்பட்டது தான். ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்துவிட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை உறைப் பால் தேவை அதிகரித்திருக்கிறது.

பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்குத் தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்குப் பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம். வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறைப் பால் வினியோகத்தைக் குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்குக் குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in